விகாராதிபதி உள்ளிட்ட தேரர்கள் ஐவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
களுத்துறை மாவட்டத்திற்குட்பட்ட மதுகம ஓவிடிகம மற்றும் பதுகம புதிய காலனி ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 17 பேருக்கு கடந்த தினதிதில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
மத்துகம - கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த பேருந்து ஒன்றின் சாரதி கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுக்கு உள்ளாகியமை உறுதி செய்யப்பட்டதை அடுத்து கடந்த 07 ஆம் திகதி அனுராதபுரத்திற்கு சுற்றுலா பயணமொன்றை மேற்கொண்டிருந்த 17 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தமை உறுதி செய்யப்பட்டது.
இவ்வாறு தொற்று உறுதியானவர்களில் விகாராதிபதி ஒருவரும் மற்றும் நான்கு தேரர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. அதேபோல் 11 பெண்களும் அடங்குவதாக சுகாதார பிரிவினர் தெரிவித்தனர். Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை